ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

புனித பயணம்

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபால் உறையில் ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு வருகிற 10–ந் தேதிக்குள் “மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, 5–வது தளம், அண்ணா சாலை, சென்னை–2“ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் Reviewed by Mathew Thamburaj on 22:51 Rating: 5

No comments:

Powered by Blogger.