இன்று தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த (செப்டம்பர்) மாதத்துக்கான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடக்க உள்ளது.
இந்த முகாமில், ஸ்மார்ட்டு கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட்டு கார்டை புதிதாக பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.



இன்று தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் Reviewed by thoothukudibazaar on 21:05 Rating: 5

No comments:

Powered by Blogger.